×

பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் முடுக்கு தெரு சாலை

திருவாரூர்: திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசலில் முடுக்கு தெரு சாலை சிக்கி தவிக்கிறது. இதனால் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் அனைவரும் தவித்து வருகின்றனர். திருவாரூர் நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் மூலம் பழைய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி, காய்கறி மற்றும் பழ கடைகளுக்கான வணிக வளாகம், மீன் மார்க்கெட் போன்றவை அமைப்பதற்காக மொத்தம் ரூ.34 கோடியே 99 லட்சம் அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக நகராட்சி மூலம் பழைய பஸ் நிலைய பகுதி முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

The post பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் முடுக்கு தெரு சாலை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvarur Nagar ,Dinakaran ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்