×

பெரம்பலூரில் ஆட்டோவில் தாசில்தார் தவறவிட்ட செல்போன் ஒரு மணி நேரத்தில் ஒப்படைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆட்டோவில் தாசில்தார் தவறவிட்ட செல் போனை ஒரு மணி நேரத்தி ற்குள் போலீசாரிடம் வந்து ஆட்டோ டிரை வர் ஒப்படைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி பெருமாள். அவர் நேற்று (21ம் தேதி) மாலை 5 மணிக்கு பெரம்ப லூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்லும் போது தனது செல்போனை ஆட்டோவிலேயே தவற விட் டுள்ளார். முக்கிய ஆவண ங்களை செல்போன் இன் பாக்சில் வைத்திருந்ததால் பதறிப்போன தாசில்தார் தவறவிட்டது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள் ளார். இந்நிலையில் அப்பகுதி யில் ரோந்துப் பணியில் விசாரணை செய்து கொண்டிருந்த போலீஸ் ஏட்டு சேகர், காவலர் ரஞ் சித் குமார் ஆகியோரிடம் தாசில்தார் பயணித்த ஆட்டோவின் டிரைவரான சுதாகர் என்பவர் நேரில் வந்து தாசில்தார் புகழேந் திப் பெருமாளின் செல்போ னை ஒப்படைத்துள்ளார். பின்னர் அந்த செல்போன் அரசு கேபிள் டிவி தாசில் தாரிடம் போலீசார் மூலம் பத்திரமாக ஒப்படைக்கப் பட்டது.

The post பெரம்பலூரில் ஆட்டோவில் தாசில்தார் தவறவிட்ட செல்போன் ஒரு மணி நேரத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Perambalur ,Bhujahendi Perumal ,TV ,Perambalur District ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...