×

தண்டுமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா: 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்

பள்ளிப்பட்டு: தண்டுமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை பேருராட்சிக்கு உட்பட்ட அம்பேதகர் நகரில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில், பொதுமக்கள் நிதி உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து பக்தர்கள் காப்புகட்டி, விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை கோயில் எதிரில் மலர் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் எழுந்தருள, அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிந்தா முழக்கத்துடன் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post தண்டுமாரியம்மன் ஆலய தீ மிதி திருவிழா: 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : DANDUMARIAMMAN TEMPLE FIRE PEDAL FESTIVAL ,Dandumariamman Alaya Timiti festival ,Dandumariamman Temple ,Ambedagar ,Pothaturbate ,Thiruvallur ,
× RELATED தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை...