×

விசாரணைக்கு சென்ற பெண்ணிடம் மாஜிஸ்திரேட் செக்ஸ் டார்ச்சர்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தை சேர்ந்த, ஒரு பெண் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். நீதிமன்றத்திற்கு வாக்குமூலத்தை பதிவு செய்ய சென்ற போது அங்கு இருந்த மாஜிஸ்திரேட் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக கமல்பூர் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதியிடம் அளித்த புகாரில் கடந்த 16ம் தேதி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தேன். வாக்குமூலம் அளிக்கும் முன் மாஜிஸ்திரேட் என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார். இதையடுத்து நீதிமன்ற அறையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டேன். இந்த சம்பவம் பற்றி எனது கணவரிடமும், வக்கீலிடமும் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார். பெண்ணின் புகார் பற்றி விசாரிக்க மாவட்ட செசன்ஸ் நீதிபதி,தலைமை மாஜிஸ்திரேட் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post விசாரணைக்கு சென்ற பெண்ணிடம் மாஜிஸ்திரேட் செக்ஸ் டார்ச்சர் appeared first on Dinakaran.

Tags : Agartala ,Tripura ,Kamalpur ,District ,Sessions ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை