- காங்கிரஸ்
- தர்மபுரி
- யூனியன் அரசு
- தர்மபுரி தொலைபேசி பரிமாற்றம்
- தீரதராமன்
- மாவட்ட பொருளாளர்
- வடிவேல்
- தின மலர்
தர்மபுரி: தர்மபுரியில் காங்கிரஸ் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி நிலையம் முன், நேற்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி.யும், மாவட்ட பொறுப்பாளருமான தீர்த்தராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெய்சங்கர், மோகன்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வேடியப்பன் வரவேற்றார். வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
The post காங்., கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.