×

நந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம்: எம்எல்ஏ அடிக்கல்

செங்கல்பட்டு: நந்தீஸ்வரர்கோயில் வளாகத்தில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சியில் உள்ள பிரபல நந்தீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனையடுத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வக்கீல் லோகநாதன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நந்தீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்காக பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், திவ்யா சந்தோஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Nandeswarar Temple Complex ,MLA ,Chengalpattu ,Varalakshmi Madhusudhanan ,Nandiswarar temple complex ,Nandivaram-Kooduvanchery Municipality ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்