- தர்மபுரி
- தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை
- மூத்த வருவாய் ஆய்வாளர்
- அருணகிரி
- பாலகோட்
- தின மலர்
தர்மபுரி, பிப்.17: தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை மேல்நிலை வருவாய் ஆய்வாளர் அருணகிரி மற்றும் அதிகாரிகள், பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை கண்டதும், டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, லாரியில் நடத்திய சோதனையில் கற்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், பாலக்கோடு போலீசார் சம்பவ இடம் சென்று லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.