×

விஜயநாராயணம் அருகே கோயிலில் விளக்கு திருட்டு

நெல்லை, பிப்.17: விஜயநாராயணம் அருகேயுள்ள கோவன்குளத்தில் தோப்பு மாடசாமி கோயில் உள்ளது. கடந்த 13ம்தேதி இரவு கோயில் அர்ச்சகர் பூஜைகளை முடித்து வழக்கம் போல் பூட்டி சென்றார். நேற்று காலையில் கோயிலை திறக்க வந்தபோது முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 4 அடி உயரம் கொண்ட கோயிலின் வெண்கல விளக்கு திருடப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா தங்கராஜ்(45) தகவலின் பேரில் விஜயநாராயணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post விஜயநாராயணம் அருகே கோயிலில் விளக்கு திருட்டு appeared first on Dinakaran.

Tags : Vijayanarayanam ,Nella ,Thopu Matasami Temple ,Gowankulam ,Vijayanarayan ,Arshagar Pooja ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு...