×

சின்னசேலம் அருகே பரபரப்பு கடன் தொல்லையால் வாலிபர் தீக்குளிப்பு

சின்னசேலம், பிப். 17: சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் சரவணன்(41). இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடன் தொல்லை இருந்து வந்ததாக தெரிகிறது. அதனால் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று கடனை அடைக்க முடிவு செய்துள்ளார். அதற்கு குடும்பத்தினர் தடையாக இருந்ததாக தெரிகிறது. இதனால் சரவணன் கடந்த சில நாட்களாக மனவிரக்தி அடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை இவரது மனைவி, குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சரவணன் உடலில் தீவைத்துக்கொண்டார். அப்போது வலியால் துடித்த சரவணன் சத்தம் போட்டு வெளியே ஓடி வந்தார். அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ்மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னசேலம் அருகே பரபரப்பு கடன் தொல்லையால் வாலிபர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Venkatachalam ,Saravanan ,Vasudevanur ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...