×

சிதம்பரம் அருகே விஷம் குடித்தவர் சாவு

சிதம்பரம், பிப். 16: சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் அருகே உள்ள கவரப்பட்டு வீரன் கோயில் திட்டு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் செந்தில்குமார்(48). இவருக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கீழே விழுந்ததில் இடது காலில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் இவரை மீட்டு அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

The post சிதம்பரம் அருகே விஷம் குடித்தவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Kavarappat Veeran Koil ,Annamalai Nagar ,Senthilkumar ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்