×

ரூ.25 லட்சத்துடன் தப்ப முயன்ற நிதிநிறுவன உரிமையாளர்கள் கைது

கோவை: கோவையில் நிதிநிறுவன உரிமையாளர்கள் ரூ.25 லட்சத்துடன் தலைமறைவாக திட்டமிட்டதை அறிந்த நிறுவனத்தின் ஊழியரே போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை காந்திபுரம் சித்தாபுதூரில் தனலட்சுமி நகரில் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்களாக துரைசாமி, கருணாம்பிகை ஆகியோர் உள்ளனர்.

பணம் வசூலிப்பவராக குனியமுத்தூர் இடையர்பாளையத்ைத சேர்ந்த அய்யாச்சாமி (46) உள்ளார். இவர் தனது உறவினர், நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.25 லட்சத்தை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார்.

இந்நிலையில் பணத்தை திருப்பி தராமல் உரிமையாளர்கள் தலைமறைவாக திட்டமிட்டனர். இதனை அறிந்த அய்யாச்சாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசாமி, கருணாம்பிகை ஆகியோரை கைது செய்தனர்.

The post ரூ.25 லட்சத்துடன் தப்ப முயன்ற நிதிநிறுவன உரிமையாளர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thanalakshmi Nagar ,Gandhipuram Chittaputur, Coimbatore ,Duraisamy ,Karunambikai ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்