×

தஞ்சாவூா் அருகே வாலிபரை மிரட்டி ஸ்கூட்டி, நகை பறிப்பு

தஞ்சாவூா், பிப்.14: தஞ்சாவூர் அருகே வாலிபரை மிரட்டி ஸ்கூட்டி நகையை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் அருகே உள்ள காசநாடுபுதூர் பகுதியை சேர்ந்தவர் மணிசேகரன் (40).இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சி -நாகை புறவழிச்சாலை வெட்டிக்காடு பாலம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் ஸ்கூட்டியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் ஆயுதங்களை காட்டி மிரட்டி மணிசேகரனிடம் இருந்து 2 பவுன் செயினை பறித்ததோடு அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டியையும் பறித்து அவரை விரட்டினர்.இது குறித்து மணி சேகரன் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் . அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post தஞ்சாவூா் அருகே வாலிபரை மிரட்டி ஸ்கூட்டி, நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Manisekharan ,Kasanaduputhur ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...