தர்மபுரி,பிப்.14: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருநெல்வேலி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து தர்மபுரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(39). இவர், கடந்த 2014ம் ஆண்டு தாசில்தார் பயன்படுத்தும் முத்திரையை போலியாக தயாரித்து வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அப்போதைய அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்ஸ்பெக்டர் பவுலோஸிடம் விசாரணை மேற்கொள்ள, நீதிமன்றம் அழைப்பு விடுத்தது. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பவுலோசுக்கு பிடிவாரன்டு பிறப்பித்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ், தற்போது திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நெல்லை இன்ஸ்பெக்டருக்கு தர்மபுரி கோர்ட் பிடிவாரன்ட் appeared first on Dinakaran.