×

கட்டிட பணியின்போது சுவர் சரிந்து விழுந்ததில் மேஸ்திரி பரிதாப பலி

புழல்: பழைய வீட்டு சுவரை அப்புறப்படுத்தியபோது சுவர் திடீரென சரிந்து விழுந்ததில் கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பலியானார். சென்னை புழல் திருவிக தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி (59). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது வீட்டு பக்கத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவரின் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் சின்னசாமி கட்டிடப் பணிகளை பார்வையிட கட்டிடப்பணி நடைபெறும் இடத்துக்குச் சென்றார்.

அங்கு அவர் கட்டிடத் தொழிலாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பக்கவாட்டு சுவர் சரிந்து சின்னசாமி மீது விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய சின்னசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கட்டிட பணியின்போது சுவர் சரிந்து விழுந்ததில் மேஸ்திரி பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : PUJAL ,Chinnaswamy ,Thiruvik Street, Puzhal, Chennai ,Panneerselvam ,Mestri ,
× RELATED புழலில் பயன்பாடில்லாத வருவாய்த்துறை...