×

பிப்ரவரி 27ம் தேதி அரசு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

 

ஈரோடு, பிப்.13: அரசு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள குறைத்தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் எதிர்வரும் 27-2-2024 அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

கலெக்டரின் தலைமையில், நடைபெற உள்ள இக்குறைதீர் கூட்டத்தில், சென்னை, நிதித்துறை ஓய்வூதிய இயக்குநர் பங்கேற்கிறார். எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை 2 பிரதிகளுடன் வரும் 20-2-2024ம் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தின் 3வது தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) அவர்களிடம் நேரிலோ அல்லது ‘ஹெச்’ பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிப்ரவரி 27ம் தேதி அரசு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Collector ,Rajagopal Sunkara ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...