×

திருக்காட்டுப்பள்ளி அருகே தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம்

 

திருக்காட்டுப்பள்ளி,பிப்.12: திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசமானது. திருக்காட்டுப்பள்ளி அருகே நேமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முனியய்யா (55). இவரது வீடு அருகில் கிடந்த குப்பையில் பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த முனியய்யா வீடு, அவர் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிந்தன் மனைவி வெள்ளையம்மாள் என்பவர் குடிசை வீட்டுக்கும் பரவியது.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் வீடுகளில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளில் இருந்த ஆவணங்கள், டிவி, மிக்ஸி, கிரைண்டர், பீரோ உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இரண்டு வீடுகளிலும் உள்ளவர்கள் கூலி வேலைக்கு சென்று விட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

The post திருக்காட்டுப்பள்ளி அருகே தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Thirukkatupalli ,Nemam ,Balasubramanian ,Muniyaiah ,Iswaran Kovil Street ,Nemat ,Tirukkatupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு