×

மனைவி, குழந்தைகள் சித்ரவதை அமெரிக்க இன்ஜினியர் கைது

சேலம்: சேலம் திருவாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகள் ஆர்த்தி (26). இவரது முதல் கணவர் கண்ணன், கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். இதனால், ஆர்த்தி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு, தனது 2 மகன்களை வளர்த்து வந்துள்ளார். இச்சூழலில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம், சேலம் சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியரான இன்ஜினியர் பாஸ்கர் (55) என்பவரை ஆர்த்தி, 2வது திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் இது 2வது திருமணம். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 9ம் தேதி இரவு, சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளை கீழே இறக்கி விட்டு விட்டு, பாஸ்கர் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அவரது தங்கும் விடுதியில் இருந்த பாஸ்கரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அப்போது, அந்த வாகனத்தின் முன் ஆர்த்தி அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினர். உடனே போலீசார், தர்ணா செய்த ஆர்த்தியை இழுத்து அப்புறப்படுத்தி விட்டு, வாகனத்தை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தன்னையும், குழந்தைகளையும் சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கணவர் பாஸ்கர் மீதுஆர்த்தி சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post மனைவி, குழந்தைகள் சித்ரவதை அமெரிக்க இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Govindan ,Arthi ,Thiruvakkaundanur ,Kannan ,Corona ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...