காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில், ‘பாமக கடந்த 34 ஆண்டுகளாக மாநிலம் மற்றும் தேசிய நலன் கருதி பல்வேறு திட்டங்களையும், நான் அமைச்சராக இருந்தபோதும் அதன் பின்னும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
இந்நிலையில், வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்த நிலைகளை பல்வேறு ஊடகங்கள் பாமக குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை பாமக சார்பில் எடுக்கப்படும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார்.
The post யாரோட கூட்டணி? சீக்கிரம் சொல்றோம்: அன்புமணி பேட்டி appeared first on Dinakaran.
