×

குமரகோட்டம் கோயில் அருகே பைக் திருட்டு


காஞ்சிபுரம்: குமரகோட்டம் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கம்பெனி ஊழியரின் டூவிலர் திருடுபோனது குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் சேர்மன் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் குமார் (35). இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குமரக்கோட்டம் முருகன் கோயில் எதிரில் தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தவர் நிறுத்திய இடத்தில், தனது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குமார், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குமரகோட்டம் கோயில் அருகே பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kumarakottam temple ,Kanchipuram ,Kumar ,Mohan ,Perumal Koil Street ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...