×

வடக்கு மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

 

பெரம்பலூர்,பிப்.10: வடக்கு மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வடக்குமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சசிநர்மதா வரவேற்றார். ஆசிரியை இந்திராகாந்தி ஆண்டுறிக்கை வாசித்தார். விழாவிற்கு வடக்குமாதேவி ஊராட்சி மன்றத்தலைவர் தங்கராசு தலைமை வகித்தார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, பெரம்பலூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, ஆசிரியர் பயிற்றுநர் பாலசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். கலை நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்கள் நாகராஜ், ஆர்த்தி, கிறிஸ்டி ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியை செல்வராணி நன்றி தெரிவித்தார். விழாவில் ஊர் பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

The post வடக்கு மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : North Madevi Uradachi ,Union Primary School Annual Ceremony ,PERAMBALUR ,NORTH MADEVI UNION PRIMARY SCHOOL ANNIVERSARY ,DISTRICT ,NORTH DAKUMADEVI URATSI UNION PRIMARY SCHOOL ANNIVERSARY ,Sasinarmata ,North Madevi Uradachi Union ,Primary School ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...