சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். பிப்.2ல் இடும்பாவனம் கார்த்திக் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணுவும் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். கார்த்திக், விஷ்ணு ஆகிய இருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கிடம் என்.ஐ.ஏ. விசாரணை..!! appeared first on Dinakaran.