×

தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது!

தடையை மீறி போராட்டம் அறிவித்த நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய பேரவை தலைவர் மணியரசன் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிப்பு. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் காவல்துறை அனுமதி மறுத்தது.

தடையை மீறி இன்று வடலூரில் மாலை போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். நாம் தமிழர் கட்சியினர் அறிவிப்பை தொடர்ந்து தற்போது முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் அன்புத் தென்னரசன், சால்டின், சுரேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

The post தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது! appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,Vadalur ,Cuddalore district ,Sathya Gnana Sabha ,Dinakaran ,
× RELATED வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற...