×

தொழிற்பள்ளிகள் துவங்க, புதுப்பிக்க 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஈரோடு கலெக்டா் தகவல்

ஈரோடு, பிப்.8: தொழிற்பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் 2024-2025ம் கல்வியாண்டிற்கு, புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் தொடர்பாக விண்ணப்பிக்க விரும்புவோர் www.skilltraining.tn.gov.in < http://www.skilltraining.tn.gov.in > என்ற இணையதள முகவரியில் வருகிற 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தினை 044-22501083, 22500099, 22500199 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தொழிற்பள்ளிகள் துவங்க, புதுப்பிக்க 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: ஈரோடு கலெக்டா் தகவல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Collector ,Rajagopal Sunkara ,Coimbatore ,
× RELATED ஈரோடு பெருமுகையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை