×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

இடைப்பாடி, பிப்.8: மேட்டூர் தாலுகா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புருஷோத்தமன்(30). ரேடியோ மைக்செட் தொழில் செய்து வந்தார். பூலாம்பட்டி கூடக்கல் மாரியம்மன் கோயில், திருவிழா நடந்து வருகிறது. இதற்காக ரேடியா செட் கட்ட, புருஷோத்தமன் தென்னை மரத்தில் ஏறி ரேடியோ கட்டிக் கொண்டு சீரியல் லைட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மட்டையிலிருந்து அருகில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி, மட்டையில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி புருஷோத்தமன் படுகாயமடைந்ததார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பூலாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Ethappady ,Rettiur ,Mettur taluk ,Purushottaman ,Poolampatti Koodakkal Mariamman ,Temple ,
× RELATED பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்