×

கடலூரில் இருந்து நண்பரை தேடி வந்து சென்னையில் தவித்த 2 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: சென்னையில் உள்ள நண்பரை தேடி வந்து தவித்த 2 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், ஏழுமலை சாலையில் 20 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள் வழிதெரியாமல் நிற்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கடலூர் மாவட்டம், புலிவலம் தெற்கு தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஆர்த்தி (20) என்பதும், மற்றொருவர் வடக்கு தெருவை சேர்ந்த நடராஜன் மகள் நர்மதா (20) என்பதும் தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரை தேடி சென்னைக்கு வந்தாக தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு பெண்களையும் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் போலீசார் தங்கவைத்தனர். மேலும், கடலூரில் உள்ள அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

The post கடலூரில் இருந்து நண்பரை தேடி வந்து சென்னையில் தவித்த 2 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Chennai ,Pallikaranai Police Station ,Nanmangalam, Yemumalai road ,Velachery ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...