×

ஆத்தூர் அருகே காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது

ஆறுமுகநேரி, பிப். 6:சாத்தான்குளம் தாலுகா, தொட்டிக்காரன்விளை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம்(36). இவர், ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்து உள்ளது. இதனைப் பயன்படுத்தி கடந்த 3ம் தேதி நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ₹16 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் பட்டை மற்றும் வயர்களை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து மாணிக்கம் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன், எஸ்ஐ செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி வடக்குத்தெருவைச் சேர்ந்த தேவேந்திரகுமார் மகன் பொன்சரண்(21), ஆத்தூர் புதுநகரைச் சேர்ந்த 17 வயதான இளஞ்சிறார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

The post ஆத்தூர் அருகே காப்பர் வயர் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Attur ,Arumuganeri ,Manikam ,Amman Koil Street ,Thantikaranvilai ,Chatankulam Taluk ,Cherthaboomangalam ,Dinakaran ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?