×

ஈரோடு-கரூர் ரயில் பாதை பராமரிப்பு ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்

 

ஈரோடு, பிப்.5: ஈரோடு-கரூர் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் ஈரோடு-செங்கோட்டை, பாலக்காடு டவுன்-திருச்சி பயணிகள் சேவை இன்று (5ம் தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு-கரூர் ரயில் பாதையில் பாசூர்-ஊஞ்சலூர் இடையே பொறியியல் மற்றும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் 5ம் தேதி இரண்டு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஈரோட்டிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் 2.45 மணிக்கு புறப்படும். பாலக்காடு டவுன்-திருச்சி பயணிகள் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து திருச்சி வரை இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

15 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு; வனத்துறை அதிகாரிகள் தகவல் ஈரோடு மாவட்டத்திலேயே நாகமலை குன்று மட்டுமே தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஏற்ற நல்லதொரு உயிர்ச்சூழல் மற்றும் பன்முக தன்மை கொண்ட இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

The post ஈரோடு-கரூர் ரயில் பாதை பராமரிப்பு ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Erode- ,Karur ,Erode ,Erode-Sengottai ,Palakkad Town-Trichy ,Salem Divisional Railway Administration ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...