×

குடும்பத்தினர் கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

 

நெல்லை, பிப்.5:நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அடுத்த வைராவிகுளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கசமுத்து (70) விவசாயியான இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும் இதை அவரது குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த அவர் பின்னர் வாயில் நுரைதள்ளிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெரியவந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் மணிமுத்தாறு போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post குடும்பத்தினர் கண்டித்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kasamuthu ,Vairavikulam South Street, Nellai District, Manimutthar ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...