×

உதவியாளர் விபத்தில் பலி

 

கிருஷ்ணகிரி, பிப்.5: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, தாம்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (49). இவர் வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் சம்பவ இடத்திலேயே மாதேஷ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில், குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது சடலத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உதவியாளர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Matheswaran ,Thomsonpet ,Kaveripatnam ,Krishnagiri district ,Veppanahalli Regional Development Office ,Hosur-Krishnagiri National Highway ,Guruparapalli ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்