×

முத்துப்பேட்டை அருகே பரிதாபம் பைக் மீது கார் மோதி பிட்டர் பலி

 

முத்துப்பேட்டை, பிப். 4: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (45). கம்பி பிட்டர். இவர் நேற்று முன்தினம் முத்துப்பேட்டையிலிருந்து ஆலங்காடு கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கடைதெரு அருகே திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியன் படுகாயம் அடைந்தார். அவர் 108ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் தயார் ஞானம்பாள், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த காரைக்கால் கோட்டுச்சேரி கண்ணி கோவில் தெருவை சேர்ந்த முருகனை (30) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கம்பி பிட்டர் தொழிலாளி பாண்டியனுக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post முத்துப்பேட்டை அருகே பரிதாபம் பைக் மீது கார் மோதி பிட்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam ,Muthuppet ,Muthupet ,Pandian ,Mellakkadu ,Jambuwanodai ,Alangadu ,Thiruthuraipoondi ,Katheru ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...