×

அறிஞர் அண்ணா நினைவு தினம் ரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு, சமபந்தி விருந்து டக்கு மாவட்ட திமுக செயலாளர், தொண்டாமுத்தூர் அ.ரவி பங்கேற்பு

காரமடை, பிப்.4: அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கியும், சமபந்தி விருந்தில் அமர்ந்து உணவருந்தியும் விருந்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் லோகநாதன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவை சாய்பாபா காலனி எம்.எம்.ராமசாமி, மத்வராயபுரம் கார்த்திகேயன், கவுண்டம்பாளையம் சுஜாதா, மேடூர் குணசேகரன், காரமடை நகராட்சி தலைவர் உஷா, நகர செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ராமுக்குட்டி, முன்னாள் மாவட்ட நிர்வாகி மனோகரன், மருதூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சமபந்தி விருந்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

The post அறிஞர் அண்ணா நினைவு தினம் ரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு, சமபந்தி விருந்து டக்கு மாவட்ட திமுக செயலாளர், தொண்டாமுத்தூர் அ.ரவி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Arijar Anna Memorial Day ,Ranganatha Swamy Temple ,Samabandi ,Dinner Taku District ,DMK ,Thondamuthur A. Ravi ,Karamadai ,Aranganatha Swamy Temple ,Arignar Anna Memorial Day ,Dev Anand ,Board of Trustees ,DMK Coimbatore North District ,Arijar Anna Memorial Day Worship ,Samabandi Dinner Taku District ,Dinakaran ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவர் மாயம்