×

ஊரப்பாக்கம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

தாம்பரம்: ஊரப்பாக்கம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். ரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 39 வயது மதிப்புடைய வாலிபர் சடலமாக கிடந்தார். அந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நாகூர் மீரான் (39) என்பதும், அவர், எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் படிக்கட்டில் பயணம் செய்ததும், ஊரப்பாக்கம் அருகே சென்றபோது அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஊரப்பாக்கம் அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Oorpakkam ,Thambaram ,Tambaram Railway Police ,Rabakkam railway ,Dinakaran ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...