×

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆய்வு

தூத்துக்குடி, பிப். 3: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கடந்த 1ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் துத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மற்றும் கூட்டுறவு மருந்தகம், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஆத்தூர் கிளைகளில் 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.273 கோடி கடன்தொகைக்கான காசோலைகளை வழங்கினர். ஆத்தூர், முக்காணி ஆகியதொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை ஆய்வு செய்தும் அச்சங்கங்களின் முன்னேற்றத்திற்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். ஆறுமுகநேரி உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இதில் தூத்துக்குடி மண்டல இணை பதிவாளர் முரளிகண்ணன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர்- செயலாட்சியர் நடுக்காட்டுராஜா, துணை பதிவாளர்கள் ரவீந்திரன், சங்கர், மாரியப்பன், விஜயன், காந்திராஜ் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Subbaiyan ,Tuticorin District ,Farm Green Consumer Store ,Tuticorin Agricultural Producers Co-operative Sales Association ,Dinakaran ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...