×

ஜவுளிக்கடை ஓனர் மாயம்

 

கிருஷ்ணகிரி, பிப்.3: கிருஷ்ணகிரி அடுத்த கெலமங்கலம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் நேருகெத் (37) ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட நேருகெத் கடந்த 31ம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்றார்.

பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தந்தை ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜவுளிக்கடை ஓனர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Nehrugheth ,Kelamangalam Vinayakar Koil Street ,Nehru Geth ,Mayam ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்