×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் வாதம்

விழுப்புரம் : பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜராகி வாதம் செய்து வருகிறார். 2-வது நாளாக தானே ஆஜராகி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் ராஜேஷ்தாஸ் வாதிட்டார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் வாதம் appeared first on Dinakaran.

Tags : Rajeshdas ,Villupuram ,Villupuram Principal Sessions Court ,Judge ,Purnima ,Dinakaran ,
× RELATED பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...