×

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு..!!

திருச்சி: திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு பெற்றது. சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனையை முடித்துவிட்டு சாட்டை துரைமுருகன் மனைவியிடம் சம்மன் கடிதத்தை கொடுத்துவிட்டு என்ஐஏ அதிகாரிகள் சென்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பெயரில் பல்வேறு நாடுகளில் இருந்து நிதி திரட்டியதாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடந்தது.

 

The post நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : NIA ,Naam Tamilar Party ,Shattai Duraimurugan ,Tiruchi ,Sattai Duraimurugan ,Sanmukha Nagar, Tiruchi ,N.I.A. ,Duraimurugan ,Matarasi ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...