×

புதுக்கோட்டை அருகே காரை மறித்து நகை, பணம் கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர்

 

புதுக்கோட்டை,பிப்.2: புதுக்கோட்டை அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து தாக்கி, நகைகளை பறித்துச் சென்ற சம்பம் குறித்து 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை அருகே பூங்குடியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் செந்தில்குமரன்(38). அதே ஊரை சேர்ந்தவர் குமார் மகன் சீனிவாசன். இவர்கள் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவில், காரில் தர்ஹா வழியாக புதுக்கோட்டையில் இருந்து பூங்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். தர்ஹா அருகே காட்டுப் பகுதியில் சென்ற இவர்களை வழிமறித்து தாக்கிவிட்டு, காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, செந்தில்குமரனை மீண்டும் பலமாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த 5.5 பவுன் நகைகள், ரூ.15,000த்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமரன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அடிக்கடி நடக்கும் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மறுநாள் சாலை மறியல் போராட்டத்திலும் அப்பகுதியினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார், 5 பேரை பிடித்து தனித் தனியாக வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே காரை மறித்து நகை, பணம் கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Sampam ,Kumaraswamy ,Senthilkumaran ,Poongudi ,Kumar ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...