×

படுக்கை அறையில் ஸ்பை கேமரா பொருத்தி பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த மருத்துவ மாணவர் அதிரடி கைது

சென்னை: சென்னை ராயபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டின் படுக்கை அறையில் ஸ்பை கேமரா இருப்பதை பார்த்து அந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அவர் அங்கிருந்த ஸ்பை கேமராவை எடுத்து பரிசோதனை செய்த போது மனைவி உடை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, ஸ்பை கேமராவுடன் ராயபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், வீட்டின் உரிமையாளர் அப்துல் சமத்தின் மகன் இப்ராஹிம் (36) மீது சந்தேகம் எழுந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், இப்ராஹிம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்டிஎஸ் பல் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. பின்னர் இப்ராஹிமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post படுக்கை அறையில் ஸ்பை கேமரா பொருத்தி பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த மருத்துவ மாணவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Mata Koil Street, Rayapuram, Chennai ,Guindy ,
× RELATED சென்னை மாணவிகளை பாலியலில்...