×

10 பவுன் தங்க நகை திருடியவர் கைது

 

கோவை ஜன.31: கோவை வெள்ளலூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கசாமி (56). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இரண்டு நாட்கள் முன்பு இவர் வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடியில் உள்ள கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார். நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டில் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது இது தொடர்பாக லிங்குசாமி போத்தனூர் போலீஸ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ராஜா (36) என்பவரை போத்தனூர் போலீசார் தேடினர். நேற்று இவரை பிடித்தனர். இவர் லிங்கசாமி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். வீட்டில் யாருமில்லை என அறிந்து இவர் திருடியதாக தெரிகிறது. சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் இவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.

The post 10 பவுன் தங்க நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Govai ,Lingasamy ,Thiruvaluvar Nagar ,Gowai Vellalur ,Tuticorin ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!