×

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி தாய், மகள் பலி

 

உளுந்தூர்பேட்டை, ஜன. 30: திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா (50). இடியாப்பம் வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி ஜெயா (40), மகள்கள் வசந்தி (17), வைதேகி (13) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு சென்றனர். இந்த காரை அழகுராஜா ஓட்டிச் சென்றுள்ளார். நேற்று அதிகாலை இந்த கார் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மெதுவாக சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க காரை அழகுராஜா மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது பின்னால் ராமேஸ்வரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. கார், பேருந்து மற்றும் லாரிக்கு இடையே நசுங்கியது. இந்த விபத்தில் காரில் சென்ற அழகுராஜாவின் மனைவி ஜெயா மற்றும் மகள் வசந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தனியார் டிராவல்ஸ் பேருந்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (54), தன்ராஜ், (52), வரதராஜ் (70), மோகன் (72), சுரேஷ் (40), குப்பு (63), நிர்மலா (61), ஸ்ரீதரன் (63), பரணி (50), சந்திரசேகர் (63), பழனி (54), கிருஷ்ணவேணி (65), நீலா (56), புவனேஸ்வரி (49), ராதா (55), பொன்னி (58), மல்லிகா (34), லதா (47), காரை ஓட்டிச் சென்ற அழகுராஜா உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த எடைக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த ஜெயா மற்றும் வசந்தி ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது சொகுசு பேருந்து மோதி தாய், மகள் பலி appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Akurraja ,Odukambatti ,Dindigul district ,Idiyappam ,Chennai ,Jaya ,Vasanthi ,Vaidegi ,
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...