×

கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம்

 

ஈரோடு, ஜன.30: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 267 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி,

அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 267 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குமரேஷ் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Collector ,Erode Collector ,Raja Gopal Sunkara ,Dinakaran ,
× RELATED டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு