×

காஞ்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு

 

காஞ்சிபுரம், ஜன.30: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 440 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Kanchipuram ,People's Grievance Day ,District Collector ,Office Complex ,People's Harmony Center ,Collector ,Kalachelvi Mohan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...