×

டாஸ்மாக் அறிவிப்பு பிப்.1 முதல் மதுபானங்கள் விலை உயர்வு

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வு வரும் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கு ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும். இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் அறிவிப்பு பிப்.1 முதல் மதுபானங்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tasmac Administration ,Dinakaran ,
× RELATED மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும்...