×

முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா

போச்சம்பள்ளி: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில், நம் பள்ளி நம் பெருமை செய் நன்றி சங்க துவக்க விழா நடந்தது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இன்ஜினியர் கணேசகுமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வாசுதேவன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்கள் சங்கத்தின் முக்கியத்துவம் குறித்து அறிமுக உரை ஆற்றினார். ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மோகன், சக்தி சாந்தகுமார், பாலையா, ஆசிரியர்கள் சின்னதுரை, சின்னராஜ், சக்திவேல், வேலாயுதம், சபாபதி முன்னிலை வகித்தனர். விழாவில், சேர்மேன் விஜயலட்சுமி பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், ஆதி திராவிட நல குழு மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உதவி தலைமை ஆசிரியர் சின்னதுரை உறுதிமொழி வாசித்தார். விழாவில், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது பழைய நினைவுகளை பரிமாறி கொண்டனர். முன்னதாக மாணவர்கள் சங்கத்திற்கு ‘செய் நன்றி’ என்ற லோகோ படத்தை மூத்த மாணவர்கள் திறந்து வைத்தனர். பள்ளி வளர்ச்சியில் பங்கெடுப்பது குறித்து, முன்னாள் மாணவர்கள் உறுதி ஏற்று கொண்டனர். ஆசிரியர் செல்வி நன்றி கூறினார்.

The post முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Alumni Association Inauguration Ceremony ,Nam Palli Nam Ghoot Say Thank You Society ,Mathur Government Boys Higher Secondary School ,Engineer ,Ganesakumar ,President ,Parents Teachers Association ,Dinakaran ,
× RELATED புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி