×

புதுச்சேரிக்கு வந்த துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வரவேற்பு

 

புதுச்சேரி, ஜன. 29: அரசு முறை பயணமாக புதுச்சேரி விமான நிலையம் வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கரை ஆஞ்சநேயர் சிலை கொடுத்து கவர்னர் தமிழிசையும், வெள்ளி கலசம் கொடுத்து முதல்வர் ரங்கசாமியும் வரவேற்றனர். அரசு முறைப் பயணமாக புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று மாலை புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்தார்.

அவரை கவர்னர் தமிழிசை ஆஞ்சநேயர் சிலையை கொடுத்தும், முதல்வர் ரங்கசாமி வெள்ளி கலசம் மற்றும் பாலாஜி-பத்மாவதி படத்தை கொடுத்தும் வரவேற்றனர். பின்னர் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனிடையே துணை குடியரசு தலைவர் செல்லும் வழியெங்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

The post புதுச்சேரிக்கு வந்த துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதல்வர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,Vice President ,Puducherry ,Tamilisai ,Jagadeep Thangar ,Puducherry Airport ,Anjaneya ,Rangasamy ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...