×

புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

 

ஈரோடு,ஜன.29: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் போலீசார் நேற்று முன் தினம் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட வெங்கடாசலம் வீதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள டீக்கடை ஒன்றில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா, பான் மசாலா பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், கடை உரிமையாளரான, கருங்கல்பாளையம், பெரிய மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பச்சியப்பன் (59) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

The post புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Town ,Venkatachalam road ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 12 பேர் கைது