×

சிறுமுகையில் இளைஞரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

 

மேட்டுப்பாளையம், ஜன.28: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை இரும்பறை பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளைஞர். இவர் தனது அக்காள் மற்றும் அக்காள் மகளுடன் அவர்களது வீட்டின் முன்பு தைப்பூச தேர்த்திருவிழாவிற்கு செல்வதற்காக நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக அதே பகுதி இளைஞர்கள் இருவர், இளம்பெண்ணை கேலி செய்துள்ளனர். இதனை மாமனான 22 வயது இளைஞர் தட்டி கேட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். மேலும், அதில் ஒரு இளைஞர் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் குத்தியுள்ளார்.

இதில் அவர் காயமடைந்து உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினரை கண்டவுடன் இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த வாலிபர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிறுமுகை போலீசார் நேற்று முன்தினம் இரவு இரும்பறை பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகன் மதன் (23), சின்னதுரை என்பவரது மகன் மோகன்ராஜ் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post சிறுமுகையில் இளைஞரை கத்தியால் குத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Surumuga ,Mettupalayam ,Sirumugai Irumparai ,Thaipusa Therthuruviya ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...