×

அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தவருக்கு சிறை

ராமநாதபுரம். ஜன. 25: பரமக்குடி அருகே சத்திரக்குடி காமன்கோட்டையை சேர்ந்த ராமசாமி மகன் கண்ணன் (39). இவர் கடந்த 14.2.2023 அன்று காமன்கோட்டையிலிருந்து பரமக்குடி சென்ற அரசு டவுன் பஸ்ஸில் பயணித்துள்ளார். பஸ் சத்திரக்குடி சென்றபோது கண்ணன் பஸ்ஸில் இருந்த தனது உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பஸ் டிரைவர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன், பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். ஓட்டுநர் புகாரின்பேரில், சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு, பொதுச்சொத்தை சேதப்படுத்திய கண்ணனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தவருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramaswamy ,Kannan ,Chatrakkudi Kamankottai ,Paramakkudi ,Kamankottai ,Paramakudi ,Chatrakudi ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...