×

கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

கெங்கவல்லி: வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் மதுபானங்கள் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு புகார் வரப்பெற்றது. அவரது உத்தரவின் பேரில், வீரகனூர் எஸ்ஐ சிவகுருநாதன் தலைமையில் போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பகடப்பாடி மயான பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் மது வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளையூரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன்(31) என்பவரை போலீசார் செய்து கைது செய்தனர்.

The post கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Athur ,DSP ,Nagarajan ,Veerakanur ,SI Sivagurunathan ,Bagadappadi ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை