×

தைலாபுரம் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

*பொதுமக்கள் அச்சம்

நாசரேத் : தைலாபுரத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் நிலவுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிடாநேரி ஊராட்சிக்குட்பட்ட நாசரேத்- சாத்தான்குளம் மெயின் ரோட்டில் தைலாபுரம் உள்ளது. இப்பகுதி மெயின் ரோட்டில் கடந்த 10 நாட்களாக போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் உலா வந்து பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி வருகின்றன. இந்த சாலை வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்நிலையில் மாடுகள் சாலையின் நடுவே நின்று கொண்டு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மறித்து குறுக்கே செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் நேரம் மாடுகள் சாலையில் தறிகெட்டு ஓடுகின்றன. சிலர் மாடுகளால் தடுமாறி விழுந்து காயமடையும் நிலையும் தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தைலாபுரம் மெயின் ரோட்டில் மாடுகள் உலா வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தைலாபுரம் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Thailapuram road ,Nazareth ,Thailapuram ,Thilapuram ,Nazareth-Sathankulam ,Bitaneri Panchayat ,Thilapuram road ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்